ஞாயிறு, 27 அக்டோபர், 2013

தேங்காங் எண்ணெயின் விலை அதிகரிப்பு



சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளமையினால் அது சார் உற்பத்திகளின் விலையும் அதிகரித்துள்ளது.
அதன்படி இன்று சந்தையின் ஒரு போத்தல் தேங்காங் எண்ணெயின் விலை 200 ரூபாவையும் தாண்டியுள்ளது.
தேங்காய் உற்பத்தியின் வீழ்ச்சி இதற்கு பிரதான காரணமாகுவதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆலை உரிமையாளர்களுக்கு அதிகளவில் கொப்பரா கிடைக்காமையினால் உற்பத்தி குறைவடைந்துள்ளதாகவும் அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் காரணமாகவும் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, உள்நாட்டு உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் வெளிநாடுகளில் இருந்து தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படுவதாக தெங்கு ஆராச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, தேங்காய் எண்ணெயை கலப்படம் செய்து விற்பனை செய்யும் ஓர் நிலமையும் உருவாகியுள்ளது. இதன் காரணமாக புறக்கோட்டையில் இன்று நுகர்வோர் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் ஆராயும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.