விளையாட்டு

2014 கிரிகட் உலக கிண்ணத்தை வென்றது இலங்கை

சங்கக்கார அதிரடி; உலக சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை


உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை இலங்கை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.


போட்டியில் 131 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.


இந்த வெற்றியின் மூலம் 18 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ணம் ஒன்றை இலங்கை கைப்பற்றியுள்ளது.

இலங்கை துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்கார 52 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 24 ஓட்டங்களையும், திஸர பெரேரா 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.



இந்திய பந்துவீச்சில் அமித் மிஸ்ரா, அஸ்வின், ரெய்னா மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றது.


அணி சார்பில் அதிரடியாக ஆடிய விராட் கோஹ்லி 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார் ரோஹித் சர்மா 29  ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.


இலங்கை பந்துவீச்சில் குலசேகர, ஹேரத் மற்றும் மெத்தியூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.


போட்டியின் நாயகனாக குமார் சங்கக்காரவும், தொடரின் சிறப்பாட்டக்காரராக விராட் கோஹ்லியும் தெரிவாகினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக