புதன், 5 பிப்ரவரி, 2014

காதலனுடன் இருந்த புகைப்படம் பேஸ்புக்கில் வந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!


பேஸ்புக் எனப்படும் முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் ஒன்றினால்
16 வயது பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



இந்த சம்பவம் குருநாகலில் பதிவாகியுள்ளது.



இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்படி மேலும் தெரியவருவதாவது,



குருநாகல் பாடசாலை ஒன்றில் 11ம் தரத்தில் கல்வி பயிலும் விதூசா என்ற மாணவி
தொடர்பான புகைப்படம் ஒன்று முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



குறித்த மாணவி ஒரு ஆணுடன் நிற்பது போன்றே அப்புகைப்படம்
வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஆண் மாணவியின் காதலன் என
சந்தேகிக்கப்படுகிறது.



இந்த புகைப்படத்தை அவதானித்த பாடசாலை அதிபர் மாணவியை அழைத்து கடுமையாக
திட்டி எச்சரித்துள்ளதுடன் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து வரும்படி
பணித்துள்ளார்.



நேற்று (05) மாலை பாடசாலை முடிந்து வீடு சென்ற மாணவி பெற்றோரிடம்
இவ்விடயத்தை கூறாமல் தனது அறைக்குள் சென்று சேலை ஒன்றின் உதவியில்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.