சனி, 29 மார்ச், 2014

தூய வழி: ஜனாஸா தொழுகை தொழும் முறை

                                     

ஜனாஸா தொழுகைக்கு நான்கு தக்பீர்கள் கூற வேண்டும். முதல் தக்பீர் கூறிய
பிறகு ஸூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும். இரண்டாவது தக்பீரில் நபி(ஸல்)
அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். மூன்றாவது நான்காவது தக்பீரில்
மய்யித்திற்காக துஆ செய்ய வேண்டும். பிறகு இரண்டு புறமும் ஸலாம் கூற
வேண்டும்.
முதல் தக்பீருக்கு பின்
ஜனாஸா தொழுகை முதல் தக்பீருக்குப் பின் ஸூரத்துல் ஃபாத்திஹாவை
(அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.....)
ஓத வேண்டும்.
இரண்டாவது தக்பீருக்கு பின்




நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி
முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வஆலா இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்,
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பராக்த அலா இப்ராஹீம,
வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். (புகாரி) 




மூன்றாவது
நான்காவது
தக்பீருக்கு பின்




மய்யித்திற்காக வேண்டி தூய மனதுடன் பிரார்தனை
செய்யவேண்டும்
அல்லஹும்ம ஃபிர்லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு
வஅக்ரீம் நஸுலஹு வவஸ்ஸிஃ மத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் வநக்கிஹி
மினல் கதாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யழ மினத்தனஸ் வ அப்தில்ஹு தாரன் கைரன் மின்
தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்ஹில்ஹுல் ஜன்னத
வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்  (முஸ்லிம், நஸயி)
அல்லஹும்மஃபிர் லிஹய்யினா, வமய்யிதினா 
வஷாஹிதினா, வகாயிபினா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்ஸானா,  அல்லஹும்ம மன்
அஹ்யைதஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல்
ஈமான்.  (நஸயி, அஹ்மத்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக