ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் 'ஐஸ் பக்கெட் சவால்" அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சவாலை உலக பிரபலங்களில் பலர் ஏற்று தங்கள் தலையில் ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை ஊற்றியுள்ளனர். மேலும் இந்த சவாலை ஏற்கும் ஒவ்வொருவரும் 3 பேரை கைகாட்டி அவர்களை இந்த சவாலை ஏற்குமாறு கூற வேண்டும். அப்படி 24 மணித்தியாலத்துக்குள் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்க மறுக்கும் நபர்கள் அறக்கட்டளைக்கு 100 டொலர்களை செலுத்த வேண்டும். இந்நிலையில் நேற்று ஒடெல் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஒடாரா குணவர்தன சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் சமிரா ரெட்டி ஆகியோருக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுத்தார். இந்நிலையில் அந்த சவாலை மஹேலவும் சங்காவும் ஏற்றுக்கொண்டு இருவரும் அதனை நிறைவேற்றினர். மஹேல ஜயவர்தன ஐஸ் பக்கெட் சவாலை மைக்கல் கிளாக், ராகுல் டிராவிட் மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோருக்கு விடுத்துடன் குமார் சங்கக்கார ஐஸ் பக்கெட் சவாலை விராட் ஹோலி, ஸ்டெய்ன் மற்றும் அடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக