திங்கள், 30 டிசம்பர், 2013

விலை அதிகரிப்புக் கோரி பால்மா இறக்குமதியை நிறுவனங்கள் குறைத்தமையே தட்டுப்பாட்டுக்கு காரணம்

உலக சந்­தையில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள பால் மாவின் விலை­க­ளுக்கு நிக­ராக இலங்கை சந்­தையில் தமது உற்­பத்­தி­களை விற்­பனை செய்ய முடி­யாத கார­ணத்­தினால் இலங்­கையில் பால்மா இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னங்கள் தமது இறக்­கு­ம­தியை குறைத்­துள்­ள­மையே உள் நாட்டு சந்­தையில் பால்மா வகை­க­ளுக்­கான தட்­டு­பாடு ஏற்­பட்­டுள்­ள­மைக்கு கார­ண­மாகும் என்று நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது.
சந்­தையில் நிலவும் பால்மா தட்­டுப்­பாடு நிலைமை தொடர்­பாக நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபையின் உயர் அதி­காரி ஒரு­வ­ருடன் வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
இன்று நாட்டின் சந்­தை­களில் பால்மா வகை­க­ளுக்கு பாரிய தட்­டுப்­பாடு காணப்­ப­டு­கின்­றது. இதற்கு பிர­தான கார­ண­மாக அமை­வது நாட்டில் உள்ள முன்­னணி நிறு­வ­னங்கள் தமது இறக்­கு­ம­தி­யினை குறைத்­த­மை­யாகும். காரணம் இன்று உலக சந்­தையில் பால் மா வகை­களின் விலைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த நிலையில் இந்­நி­று­வ­னங்கள் உள்­நாட்டில் பால் மா வகை­களின் விலை­யினை அதி­க­ரிக்க கோரி தொடர்ச்­சி­யாக கோரிக்கை விடுத்து வரு­கின்­றன. எனினும் நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபை­யினால் அதற்­கான அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. காரணம் உலக சந்­தையில் பால்மா வகை­களின் விலைகள் தற்­போது அதி­க­ரித்­தி­ருந்த போதிலும் எதிர்­வரும் சில காலங்­களில் விலை குறை­வ­டை­வ­தற்­கான வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் உள்­நாட்டு சந்­தையில் பால்மா வகை­களின் விலை­யினை தற்­போது அதி­க­ரித்தால் உலக சந்­தையில் விலை வீழ்ச்­சி­ய­டையும் போது எமக்கு விலை­யினை குறைக்க நட­வ­டிக்கை எடுக்க முடி­யாமல் போய்­விடும்.
எமது நாட்டின் மாதாந்த பால் மா நுகர்வு 6000 மெட்ரிக் தொன் ஆக காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் நவம்பர் மாதத்தில் நாட்­டிற்கு 3000 மெட்ரிக் தொன்பால் மா இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக பதி­வா­கி­யுள்­ளது. இது மொத்த தேவையின் 50 வீத­மாகும். மிகுதி 50 வீத தேவை­யினை உள்­நாட்டு உற்­பத்­தியை கொண்டு பூர்த்தி செய்ய வேண்­டிய நிலை எமக்கு ஏற்­பட்­டது. ஆனாலும் அது சாத்­தி­ய­மற்ற ஒரு விட­ய­மாகும். காரணம் உள்­நாட்டில் ஐலன்ட் பெல்­வத்த நெஸ்லே, போன்ற உற்­பத்­திகள் மாத்­தி­ரமே பிர­தா­ன­மா­ன­தாக இருக்­கின்­றன. ஆயினும் இவை உள்­நாட்டு பால்மா தேவை­களை பூர்த்தி செய்ய போது­மா­ன­தல்ல. இவ்­வா­றான நிலையில் ஐலன்ட் பால்மா வினை இலங்கையில் உற்­பத்தி செய்யும் பால்மா நிறு­வன ஊழி­யர்கள் மேற்­கொண்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் கார­ண­மாக இந்­நிலை மேலும் உக்கிரமடைந்துள்ளது.
எவ்வாறெனினும் இந்த சந்தர்ப்பத்தில் பதுக்கல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேற் கொண்டு வருகின்றது என்றார்.

அதிசய கொடிக்கிழங்கு

அக்குறணையில் அதிசயமான ஒரு கொடிக்கிழங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அக்குறணை, குருகொடை சுலைமான்கந்த வீதியை சேர்ந்த எம்.ஜே.ஏ. அமானுல்லாவின் வீட்டுத் தோட்டத்தில் சுமார் 300 கிலோவிற்கும் மேற்பட்ட எடையுள்ள டைநோசர் வடிவில் இராட்சத கொடிக் கிழங்கு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன் இது நடப்பட்டதாகவும் கடந்த மூன்று தினங்களாக கிழங்கை அகழ்ந்து எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாப் அமானுல்லா தெரிவித்தார்.

திங்கள், 23 டிசம்பர், 2013

பந்துவீச்சு தரவரிசையில் நம்பர் 1ஸ்டெயினை முந்தினார் வெர்னான் பிலேண்டர்|Bowling rankings No. 1 - Dinakaran

பந்துவீச்சு தரவரிசையில் நம்பர் 1ஸ்டெயினை முந்தினார் வெர்னான் பிலேண்டர்|Bowling rankings No. 1 - Dinakaran
 துபாய் : டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில், சக தென் ஆப்ரிக்க வேகம் டேல் ஸ்டெயினை பின்னுக்குத் தள்ளி வெர்னான் பிலேண்டர் முதலிடம் பிடித்தார்.ஜோகன்னஸ்பர்கில் இந்திய அணியுடன் நடந்த முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சில் 4 மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 3 என மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பிலேண்டர் முதல் முறையாக நம்பர் 1 இடத்துக்கு முன்னேறி உள்ளார்.கடந்த 2009 ஜூலையில் இலங்கையின் முத்தையா முரளிதரனைப் பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த ஸ்டெயின் அதன் பிறகு நடந்த 186 டெஸ்ட் போட்டிகல் வரை நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்திருந்தார். அவரது நீண்ட ஆதிக்கத்தை சக வீரர் பிலேண்டர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் ஸ்டெயினின் வேகம் சுத்தமாக எடுபடாதது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் ஆகியோர் பேட்டிங் தரவரிசையில் முன்னேறி உள்ளனர். சந்தர்பால் 2 இடம் முன்னேறி 3வது இடத்தையும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மூன்று டெஸ்டில் 3 சதம் விளாசிய ராஸ் டெய்லர் 2 இடம் முன்னேறி முதல் முறையாக 4வது இடத்தையும் பிடித்துள்ளனர்

Tamilians: குதிரைமலை (சிங்களம்: කුදිරමලෙයි, கிரேக்கம்: Hippur...

Tamilians: குதிரைமலை (சிங்களம்: කුදිරමලෙයි, கிரேக்கம்: Hippur...: குதிரைமலை Kudiramalai குதிரைமலை முனை குதிரைமலை Kudiramalai அமைவு: 8°32′0″N 79°52′0″E நாடு இலங்கை மாக...
நாடு இலங்கை
மாகாணங்கள் வடமேல் மாகாணம்

குதிரைமலை (சிங்களம்: කුදිරමලෙයි, கிரேக்கம்: Hippuros, ஆங்கிலம்: Horse Mountain) என்பது கடலினுள் புகுந்திருக்கும் முனையும் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்த பண்டைய துறைமுக நகரமும் ஆகும். இது முன்பு யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர் நல்லூருக்கு நகரு முன் தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கியது. சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள இது மன்னார் பண்டைய துறைமுக நகரம், வரலாற்று புகழ்மிக்க திருக்கேதீச்சரம் ஆகிய வரலாறுகளை பகிர்ந்து கொண்டுள்ளது. குதிரைமலை புத்தளம் மாவட்ட வடமுனையில் அமைந்து, பயனுள்ள மன்னார் தென் துறைமுகமாகவும், யாழ் தீபகற்ப மற்றும் வன்னி அரசுகளின் தென்முனை எல்லை நகரமாக பயன்பட்டது. இது திருகோணமலையிலிருந்து வன்னிக்கு மேற்கில் அமைந்துள்ளது. இதன் கரையிலிருந்து முத்தகழ்வு இடமும் பண்டைய கிராமமுமான வங்காலை 20 கி.மீ தூரத்தில் வடக்கில் அமைந்துள்ளது.

வியாழன், 28 நவம்பர், 2013



2014ம் ஆண்டுக்கான ஓய்வூதியங்கள் வழங்கப்படும் திகதிகள் தொடர்பான தகவல்களை ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி 10ம் திகதி, பெப்ரவரி 10ம் திகதி, மார்ச் 10ம் திகதி, ஏப்ரல் 08ம் திகதி, மே 9ம் திகதி, ஜூன் 10ம் திகதி, ஜூலை 10ம் திகதி பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை ஆகஸ்ட் 08ம் திகதி, செப்டம்பர் 10ம் திகதி, ஒக்டோபர் 07ம் திகதி, நவம்பர் 10ம் திகதி மற்றும் டிசம்பர் 10ம் திகதி, ஆகிய தினங்களில் ஓய்வூதியங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(அத தெரண தமிழ்)

செவ்வாய், 12 நவம்பர், 2013

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

நம் வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மின்சாத(எலக்ட்ரானிக்)பொருட்களின் மின்சார அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

நண்பர் ஒருவர் புதிதாக இன்வெர்டர் ( Inverter ) வாங்கி இருப்பதாகவும் வீட்டினுள் எந்த பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுத்துகொள்கிறது என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப்பற்றியும் கேட்டிருந்தார் அவருக்காக மட்டுமின்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நம் வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்பதை எளிதாக கண்டுபிடிக்க ஒரு தளம் நமக்கு உதவுகிறது.
இணையதள முகவரி : http://visualization.geblogs.com/visualization/appliances/
இந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் வீட்டில் இருக்கும் மின்விசிறியில் இருந்து மடிக்கணினி வரை ஒவ்வொரு மின்சாதன பொருளும் எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்பதை அந்தந்த பொருட்களை சொடுக்கி தெரிந்து கொள்ளலாம். கூடவே நாம் பயன்படுத்தாத மின்சாதன பொருட்களை ஒவ்வொன்றாக சொடுக்கி நீக்கி விட்டு பயன்படுத்தும் பொருட்களின் மின்சார அளவு மொத்தமாக என்ன என்பதை நொடியில் தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு மின்சாரத்தை மிச்சப்படுத்த நினைக்கும் நண்பர்களுக்கும் இன்வெர்டர் பயன்படுத்துபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வெள்ளி, 8 நவம்பர், 2013

இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, 22943 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு:

வியாழன், 31 அக்டோபர், 2013



முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின் சிறப்பும்!

بسم الله الرحمن الرحيم
அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.
புனிதமான மாதங்களில் ஒரு மாதம்:
அல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில்  ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் (அல்குர் 09:36)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா,  துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும்.  அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும் (ஆதாரம்: புகாரி)
மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:
1) துல் கஃதா,
2)
துல் ஹிஜ்ஜா,
3)
முஹர்ரம்,
4)
ரஜப்
எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.
உதாரணமாக, ‘ஹராம்என்பதற்குதடுக்கப்பட்டவைஎன்ற பொருளாகும். தக்பீரதுல் இஹ்ராம்என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும்இஹ்ராமும்ஆகும். இஹ்ராம்என்பதும் தடுக்கப்பட்வைஎனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ஹுரும்என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ஹுரும்என்பதுதடுக்கப்பட்டவைஅல்லது புனிதமானவைஎன்று விளங்க முடியும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு  மிகச் சிறந்ததாகும் (அல்குர்-ஆன் 22:30)
மனிதன் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு  பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.
இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாததின் சிறப்புக்களை கீழ் குறிப்பிடும் தகவல்களூடாக அறிந்துகொள்ளலாம்.
அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!
முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது  ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.
நபி மூஸா (அலை) அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதம்!
அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள் (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),
முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பின் சிறப்பு!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் (ஆதாரம்: முஸ்லிம்)
இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது, இதனால் வாராந்திர நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்திரம் நோற்கக்கூடிய 13,14,15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதேபோன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27.28,29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பைபெற முயலவேண்டும்.
முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!
முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு  முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும், நபிகளார் (ஸல் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.
குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள்.. மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)
இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தொளிவுபடுத்துகின்றது.
பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்.  (ஆதாரம்: முஸ்லிம்)
முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தெளபாவாகும்.
முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன் (ஆதாரம்: முஸ்லிம்)
ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள்; அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது  நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.
வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செய்து, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய  நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.