சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு நிலைமை தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவருடன் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று நாட்டின் சந்தைகளில் பால்மா வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுகின்றது. இதற்கு பிரதான காரணமாக அமைவது நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தமது இறக்குமதியினை குறைத்தமையாகும். காரணம் இன்று உலக சந்தையில் பால் மா வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்நிறுவனங்கள் உள்நாட்டில் பால் மா வகைகளின் விலையினை அதிகரிக்க கோரி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. காரணம் உலக சந்தையில் பால்மா வகைகளின் விலைகள் தற்போது அதிகரித்திருந்த போதிலும் எதிர்வரும் சில காலங்களில் விலை குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் உள்நாட்டு சந்தையில் பால்மா வகைகளின் விலையினை தற்போது அதிகரித்தால் உலக சந்தையில் விலை வீழ்ச்சியடையும் போது எமக்கு விலையினை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும்.
எமது நாட்டின் மாதாந்த பால் மா நுகர்வு 6000 மெட்ரிக் தொன் ஆக காணப்படுகின்றது. இந்நிலையில் நவம்பர் மாதத்தில் நாட்டிற்கு 3000 மெட்ரிக் தொன்பால் மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இது மொத்த தேவையின் 50 வீதமாகும். மிகுதி 50 வீத தேவையினை உள்நாட்டு உற்பத்தியை கொண்டு பூர்த்தி செய்ய வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. ஆனாலும் அது சாத்தியமற்ற ஒரு விடயமாகும். காரணம் உள்நாட்டில் ஐலன்ட் பெல்வத்த நெஸ்லே, போன்ற உற்பத்திகள் மாத்திரமே பிரதானமானதாக இருக்கின்றன. ஆயினும் இவை உள்நாட்டு பால்மா தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதல்ல. இவ்வாறான நிலையில் ஐலன்ட் பால்மா வினை இலங்கையில் உற்பத்தி செய்யும் பால்மா நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்நிலை மேலும் உக்கிரமடைந்துள்ளது.
எவ்வாறெனினும் இந்த சந்தர்ப்பத்தில் பதுக்கல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேற் கொண்டு வருகின்றது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக